Top 10 News Headlines: தவெகவில் இணையும் விஜயதரணி.. பெட்ரோல், டீசலுக்கு கட்டுப்பாடு.. 11 மணி செய்திகள் இதோ!
பேச்சி ஆவுடையப்பன் June 13, 2026 01:44 PM
  • பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறார் முன்னாள் எம்.எல்.ஏ., விஜயதரணி - மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தவெக அலுவலகம் வருகை தந்துள்ளனர். 
  • சேலம் மாவட்டம் வரகூர் பகுதியில் ஒன்றரை வயது குழந்தைக்கு விஷம் வைத்து கொலை செய்த தாய் -  கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். 
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் ரூ.2,500 பணத் தகராறில் பெண்ணை கொன்று 50 அடி பள்ளத்தில் வீசிய சம்பவத்தில் 18 நாட்களுக்குப் பின் உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • தலைமை செயலகத்திற்குள் செல்வோரை தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்க வேண்டும். சட்டமன்றம் வருவோர் உரிய அனுமதி சீட்டு வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். 

  • தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.480 உயர்ந்து ரூ.1,10,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.13,860க்கும் விற்பனையாகிறது. 
  • வைகை அணையை தூர்வார அனுமதி கோரி சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். தூர்வாரும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
  • சென்னை மின்தடைக்கு சேதமடைந்த கேபிள்கள் தான் காரணம் என தெரிய வந்துள்ளது.  சாலை தோண்டும் பணிகளால் நிலத்தடி மின்கேபிள்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் 3 அதிநவீன ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது
  • இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி பஞ்சாப் மாநிலம் தர்மசாலாவில் நடைபெறுகிறது.
  • தொழிற்சாலைகளுக்கு மொத்தமாக எரிபொருள் விற்பனை செய்ய 90 நாள் தடை விதித்து மத்திய அரசு  உத்தரவிட்டுள்ளது. ஒரு வாகனத்திற்கு நாளொன்றுக்கு 200 லிட்டர் டீசல் மட்டுமே விற்பனை செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.
  • உலகளவில் முடங்கிய மெட்டா சேவைகளால் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் கடும் அவதி - இந்தியாவிலும் சமூக வலைத்தளங்களில் தங்கள் வேதனைகளை தெரிவித்துள்ளனர்.
  • பைக் டாக்ஸிகளுக்கு சட்டப்படி உரிமம் வழங்க விதிகளை வகுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
  • கேரளாவின் அரசு பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தனியார் நிறுவனங்கள் நிதியுதவி வழங்க கேரள அரசு அனுமதியளித்துள்ளது. கடும்நிதி நெருக்கடியில் உள்ள போக்குவரத்து கழகத்தை மீட்கவே இந்த நடவடிக்கை என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிபி ஜான் தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.