கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்டதில் அக்குழந்தை உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து திமுக ஐடி விங் பதிவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், இன்னும் எவ்வளவு காலம் தான் தூங்குவது போல் நடிப்பீர்கள் 'குறட்டை குமார் முதல்வரே'! தமிழ்நாடு இதுவரை கண்டிராத மிகக் கேவலமான சட்டம்-ஒழுங்கு சீரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது!
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, முட்புதரில் வீசப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளது. அதே நாளில், பூந்தமல்லி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்யப்பட்டுள்ளது.
உங்களுக்கென்று ஒரு குடும்பம் இல்லாத காரணத்தால் தான், பாதிக்கப்பட்ட இந்த ஏழைப் பெற்றோர்களின் வலியும், பச்சிளம் குழந்தைகளின் வேதனையும் உமது மரமண்டைக்கு உறைக்கவில்லையா? பெத்தவங்களோட குமுறலும், நெஞ்சகப் பதற்றமும் புரியாத ஒரு இரக்கமற்ற ஜந்துவாக இந்த மாநிலத்தின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருப்பது தமிழ்நாட்டின் சாபக்கேடு!
ஸ்ரீவைகுண்டத்திலும், சேலத்திலும் உங்கள் சொந்தத் தவெக கட்சிப் பொறுக்கிகள் பாலியல் அசிங்கங்களை அரங்கேற்றியபோது, அவர்களைக் கட்சியை விட்டு நீங்காமல், காப்பாற்ற முற்படுகிறீர்களே, அதன் விளைவு தான் இன்று கும்மிடிப்பூண்டியிலும், பூந்தமல்லியிலும் பச்சிளம் குழந்தைகள் சீரழிக்கப்படும் இந்த உச்சக்கட்ட அவலம்!
நீங்கள் உண்மையான முதல்வரும் இல்லை, உங்களை ஆட்டுவிக்கும் நிழல் முதல்வர்களுக்கு இந்த குற்றங்கள் பற்றிய கவலை இல்லை என்பதால் தான், இன்று தமிழ்நாட்டில் காமக்கொடூரர்கள் பயமின்றித் திரிகிறார்கள். அடுத்து, சோஷியல் மீடியாக்களில் "இவர் தான் மாற்றம்" என மக்களே மூலைச் சலவை செய்து, இந்த மங்குனியை அரியணையில் அமர்த்த பணிபுரிந்த Paid Influencers கூட்டமே, இப்பொழுது எங்கே போய் ஒழிந்து கொண்டீர்கள்?
3 வயதுக் குழந்தையின் மரணத்திற்கு உங்களின் அந்தப் போலி விளம்பரங்களும் ஒரு மிக முக்கியக் காரணம் என்பதை ஒப்புக்கொள்வீர்களா? உங்களின் 'மாற்றத்தின்' லட்சணம் இதுதானா? இனியாவது தூங்குவது போல் நடிப்பதை நிறுத்திவிட்டு குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள் என திமுக ஐடி விங் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.