Bhagyaraj: கடைசி வரை நிறைவேறாத பாக்யராஜின் அந்த ஆசை! என்ன தெரியுமா?
சுகுமாறன் June 27, 2026 04:44 PM

தமிழ் திரையுலகின் மிகப்பெரிய பிரபலமான ஆளுமையான பாக்யராஜ். நடிகர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட பாக்யராஜ் இன்று திடீரென மாரடைப்பால் காலமானார். அவரது மரணம் மொத்த தமிழ் சினிமாவையும் மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

பாக்யராஜுன் நிறைவேறாத ஆசை:

நடிகராக, இயக்குனராக, திரைக்கதை ஆசிரியராக மாபெரும் புகழையும், செல்வாக்கையும் பாக்யராஜ் சேர்த்திருந்தாலும் அவரது ஆசை ஒன்று நிறைவேறாத ஆசையாகவே உள்ளது. அதாவது, திரையுலகின் தான் ராஜ்ஜியம் செய்த அளவிற்கு தனது வாரிசான சாந்தனுவும் ராஜ்ஜியம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

கிடைக்காத வெற்றி:

சிறந்த நடனத் திறமை கொண்ட சாந்தனுவை 1998ம் ஆண்டு வெளியான வேட்டிய மடிச்சு கட்டு படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக பாக்யராஜ் அறிமுகப்படுத்தினார். அப்போதே அவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. அதன்பின்னர், 2008ம் ஆண்டு சக்கரக்கட்டி என்ற படம் மூலமாக கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சாந்தனுவை நாயகனாக அறிமுகப்படுத்தினார். 

முழுக்க முழுக்க இளமை துள்ளலாக உருவான இந்த காதல் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இது பாக்யராஜுற்கு சற்று ஏமாற்றத்தை அளித்தது. இந்த படத்திற்காக சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தே இந்த படத்தை பாக்யராஜ் சாந்தனுவிற்காக தேர்வு செய்தார். இதன்பின்னர், மலையாளத்தில் ஏஞ்சல் ஜான் என்ற படத்தில் மோகன்லாலுடன் இணைந்து சாந்தனு நடித்தார்.

அதன்பின்னர், தனது மகனுக்காக அவரே சித்து +2 என்ற படத்தை இயக்கினார். பள்ளி மாணவனின் காதல் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் உருவாகி தோல்வியைத் தழுவியது. அதன்பின்னர், சாந்தனு கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைப்பேசி ஆகிய படங்களில் நடித்தும் அவரால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற இயலவில்லை.

டபுள் ஹீரோ சப்ஜெக்ட்:

அதன்பின்னர், பல கதாநாயகர்கள் கதைகள் கொண்ட திரைப்படங்களிலும் அவர் நடிக்கத் தொடங்கினார். கதை திரைக்கதை வசனம் இயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, வானம் கொட்டட்டும் ஆகிய படங்களிலும் நடித்தார். மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருப்பார். அந்த படம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பேசப்பட்டாலும், அந்த கதாபாத்திரம் பெரிய தாக்கத்தை படத்தில் ஏற்படுத்தவில்லை.

பின்னர், இவர் நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. அந்த படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து மற்றொரு நாயகனாகவே நடித்திருப்பார். கடைசியாக மல்டி என்ற மலையாள படத்தில் நடித்திருப்பார்.

சாந்தனு நிறைவேற்றுவாரா?

தன்னைப் போல தனது மகன் மிகப்பெரிய கதாநாயகனாக உலா வர இயலவில்லையே என்ற வருத்தம் பாக்யராஜுற்கு கடைசி வரை இருந்தது. சாந்தனுவும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டாலும் இதுவரை அவருக்கு வெற்றி சாத்தியப்படவில்லை. எதிர்காலத்தில் வெற்றி பெற்று தனது தந்தையின் ஆசையை சாந்தனு நிறைவற்றுவாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.