“சுயசார்பு பாரதமே நமது இலக்கு!”.. 135-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை!
TV9 Tamil News June 28, 2026 03:48 PM

டெல்லி, ஜுன் 28: பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) உரையின் 135-வது பதிப்பின் மூலம் இன்று (ஜூன் 28, 2026) நாடு முழுவதும் உள்ள மக்களுடனும், உலகெங்கும் வாழும் இந்திய வம்சாவளியினருடனும் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அகில இந்திய வானொலி (ஆகாஷ்வாணி), தூர்தர்ஷன் மற்றும் பல்வேறு டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த உரையில், நாட்டின் பாதுகாப்பு, சுயசார்பு (சுயசார்பு பாரதம்) மற்றும் இந்தியாவின் பல்வேறு சமகால வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பிரதமர் விரிவாக உரையாற்றினார். இந்த உரையின் முக்கிய அம்சங்கள் குறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

இதையும் படிக்க: டிஜிட்டல் இந்தியா… மிகச்சிறந்த 11 ஆண்டுப் பயணம்!

பொதுமக்களின் பங்களிப்புக்கு நன்றி:

‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் 135-வது பகுதிக்கு முன்னதாக, நரேந்திர மோடி செயலி (NaMo App) மற்றும் ‘மை கவ்’ (MyGov) இணையதளம் மூலம் தங்களின் ஆக்கப்பூர்வமான யோசனைகளையும், கருத்துக்களையும் பதிவு செய்திருந்த லட்சக்கணக்கான இந்தியக் குடிமக்களுக்குப் பிரதமர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மக்கள் வழங்கிய சிறந்த யோசனைகள் சிலவற்றையும் அவர் இந்த உரையில் சுட்டிக்காட்டினார்.

சுயசார்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பு

Sharing this month’s #MannKiBaat. Do hear as we discuss various subjects. https://t.co/iPlqPndKlS

— Narendra Modi (@narendramodi) June 28, 2026

இந்தியாவை உலக அரங்கில் ஒரு வலிமையான, சுயசார்பு கொண்ட நாடாக மாற்றுவதில் நாட்டின் இளைஞர்கள் மற்றும் உள்நாட்டுத் தொழில்நுட்பங்களின் பங்கு மிக முக்கியமானது என்று பிரதமர் வலியுறுத்தினார். நாட்டின் பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்துவதிலும், உள்நாட்டிலேயே பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரிப்பதிலும் இந்தியா அடைந்து வரும் அபரிமிதமான முன்னேற்றங்கள் குறித்து அவர் பெருமிதம் தெரிவித்தார்.

அடிமட்ட மக்களின் சாதனைப் பகிர்வு:

வழக்கம் போல், இந்தத் தொடரிலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அசாதாரணமான சாதனைகளைச் செய்து வரும் சாதாரணக் குடிமக்களின் உத்வேகம் தரும் கதைகளைப் பிரதமர் மோடி பகிர்ந்துகொண்டார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதிய கண்டுபிடிப்புகள், மற்றும் சமூக நலத் திட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள சாதனையாளர்களை அவர் வெகுவாகப் பாராட்டினார்.

இதையும் படிக்க: பிரதமர் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் 2026: சிறந்த குழந்தைகளுக்கான தேசிய விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான ஒரு பாலமாக விளங்கும் இந்த ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி, 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமையையும், தேசப்பற்றையும் தொடர்ந்து பிரதிபலித்து வருகிறது என்றார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.