“மன்னிப்பு கேளுங்க, இல்லைனா கோர்ட்ல சந்திப்போம்” – ஸ்டாலின் மருமகனின் அந்த 'வார்னிங்' லெட்டர்…. பின்னணியில் என்ன நடக்கிறது….?
SeithiSolai Tamil June 28, 2026 07:48 PM

திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல்குமார் ஆகியோருக்கு அதிரடியாக லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “ஸ்டாலினின் மருமகன் என்ற காரணத்தை வைத்துக்கொண்டு, என் மீது தொடர்ந்து ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்புவதை என்னால் இனியும் சகித்துக்கொள்ள முடியாது” என்று அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார். தங்களைப் பற்றித் தவறான கருத்துகளைப் பதிவிட்ட அந்த வீடியோக்களை உடனடியாக நீக்குவதோடு, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையெனில் கடுமையான சட்ட நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

​அமைச்சர்களுக்கே சபரீசன் இப்படி ஒரு நோட்டீஸ் அனுப்பியிருப்பது, திமுக தலைமை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் வெறும் அவதூறு வழக்குடன் நின்றுவிடுமா அல்லது கட்சியின் உட்பூசலாக விஸ்வரூபம் எடுக்குமா என்ற கேள்வி தற்போது எழத் தொடங்கியுள்ளது. அமைச்சர்கள் தங்களின் தரப்பு விளக்கத்தை இன்னும் அளிக்காத நிலையில், சபரீசனின் இந்த அதிரடி ஆக்ஷன் சோஷியல் மீடியாவில் நெட்டிசன்களிடையே காரசாரமான விவாதங்களை கிளப்பியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.