அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய சூர்யா நற்பணி மன்ற நிர்வாகி " இங்கு இருக்கும் உங்கள் முகங்களைப் பார்க்கும்போது எனக்கு பல எம்.எல்.ஏக்கள் தெரிகிறார்கள். எம்.பி க்கள் தெரிகிறார்கள். காலமும் கடவுளும் நினைத்துவிட்டால் இது நடக்கும். சூர்யா நற்பணி மன்றம் என்கிற ஒரு அடி உயரமுள்ள இந்த மூங்கில் 130 அடி உயரத்திற்கு செல்லும். அதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் உழைக்க தயாராக இருக்க வேண்டும். சூர்யா அண்ணனுக்காக நீங்கள் உழைக்கத் தயாராக இருக்கிறீர்களா ? நீங்கள் ஒவ்வொருவரும் துடுப்பு போட்டால் தான் படகு முன்னோக்கி செல்லும். இங்கு நாம் நமக்கிடையில் உள்ள வேறுபாடுகளை மறந்து அண்ணன் ஒருவருக்காக எதையும் இழக்க நான் தயார் என்று நீங்கள் தயாராக இருக்கிறீர்களா " என அந்த நிர்வாகி பேசியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் சூர்யாவுக்கு வரவேற்பும் எதிர்ப்பும் உருவாகி வருகிறது. ரசிகர் மன்ற நிர்வாகி சூர்யாவின் அனுமதியுடன் தான் அப்படி பேசினாரா என சில ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இதுகுறித்து சூர்யா தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான எந்த விளக்கமோ மறுப்போ வெளியாகவில்லை.
காலமும், கடவுளும் முடிவு செய்துவிட்டால், அண்ணன் சூர்யா அவர்கள் அரசியலுக்கு வருவார். pic.twitter.com/h2ITuEcnYQ
— Sathish Kumar. S (@Sathish54453231) June 28, 2026