மதுரையில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த நபர் கைது - காவல்துறை விசாரணை.
மதுரை மாவட்டம், மேலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமார் நகர் பகுதியில், சிலர் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ஆயுதங்களுடன் இருப்பதாக மதுரை மாவட்ட காவல்துறையின் சிறப்பு குழுவினருக்கு (Special Team) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்று (12.07.2026) காலை, சிறப்பு குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர். காவல்துறையினரைக் கண்டதும் அங்கிருந்த நபர்கள் தப்பியோட முயன்ற நிலையில், அபினேஷ் ( 22) சொக்கம்பட்டி அருகே போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து 5.5 கிலோ கஞ்சா, 1 மின்னணு எடை இயந்திரம் (Electronic Weighing Machine), 2 கத்திகள், மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்து, மேலூர் காவல் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்புச் சட்டம் (NDPS Act) மற்றும் ஆயுதச் சட்டம் (Arms Act) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.