BJP Rajyasabha: மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவை எட்டுவதன் மூலம், அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை எளிதில் நிறைவேற்ற முடியும்.
நாடாளுமன்றத்தில் எந்தவொரு அரசிலமைப்பு சட்ட திருத்த மசோதாவையும் நிறைவேற்ற, மாநிலங்களவை மற்றும் மக்களவை என என இரண்டிலும் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது அவசியம். குறிப்பாக அவையில் உள்ள உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் வாக்குகளை பெற வேண்டும். ஆனால், கடந்த 40 ஆண்டுகளில் எந்தவொரு கட்சியாலும் மாநிலங்களவையில் தனிப்பெரும்பான்மையை கூட எட்ட முடியவில்லை. கடைசியாக 1986ம் ஆண்டில் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது, காங்கிரஸ் அந்த அந்தஸ்தை பெற்றிருந்தது. அதன் பிறகு தற்போது முதல்முறையாக தனிப்பெரும்பான்மை பெறும் கட்சி என்ற நிலையை பாஜக நெருங்கியுள்ளது.
மேற்குவங்கத்தில் பாஜக பெற்ற வரலாறு காணாத வெற்றியை தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களும் புதிய ஆளுங்கட்சியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் மம்தா பானர்ஜியால் மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்ட சுஷ்மிதா தேவ், சுகேந்து சேகர் ராய் மற்றும் பிரகாஷ் பார் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தனர். உடனடியகா அவர்கள் வேட்பாளர்களாகவும் அறிவிக்கப்பட்டனர். அந்த மூவரின் வெற்றியும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதனால் ஏற்கனவே மாநிலங்களவையில் 114 ஆக உள்ள பாஜகவின் மேலும் 117 ஆக உயரக்கூடும். இதனால் தனிப்பெரும்பான்மைக்கான எண்ணிக்கைக்கு வெறும் இடங்கள் மட்டுமே கூடுதலாக தேவைப்படும். இது மாநிலங்களவையில் அக்கட்சி பெரும் இதுவரை கண்டிராத அதிகபட்சமாகும். அதேநேரம் பாஜக கூட்டணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 152 ஆக அதிகரிக்கும்.
மாநிலங்களவையில் அரசியலமைப்பு திருத்த சட்டமசோதா நிறைவேற்றப்பட, வாக்கெடுப்பின்போது,அவையில் உள்ள உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆதரவளிக்க வேண்டும். அந்த வகையில் மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 166 பேர் ஆதரவாக வாக்களிக்க வேண்டும். இந்த நிலைக்கு பாஜகவிற்கு இன்னும் கூடுதலாக 14 பேரின் ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது. இதற்காக தான் திமுக உள்ளிட்ட பல பிராந்திய கட்சிகளின் ஆதரவை மத்திய அரசு நாடி வருகிறதாம். குறிப்பாக ஆதரவாக வாக்களிக்காவிட்டாலும், வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகி இருந்தாலே போதும் எனவும் வலியுறுத்தி வருகிறதாம்.
கீழ்குறிப்பிடப்பட்டுள்ள கட்சிகளின் நிலைப்பாட்டின் முடிவிலேயே நடப்பாண்டு மழைக்கால கூட்டத்தொடரில், பல முக்கிய அரசியலமைப்பு திருத்தச் சட்ட மசோதாக்களின் வெற்றி தோல்விகள் அமையுமென கூறப்படுகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜுலை 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை, மகளிர் இட ஒதுக்கீடு அமலாக்கம் உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டுகிறது. முன்னதாக தொகுதி மறுவரையறை மசோதா மக்களவையில் வீழ்த்தப்பட்டதற்கு திமுக முக்கிய பங்கு வகித்தது. ஆனால், தற்போது ஆட்சியை இழந்ததோடு, காங்கிரஸ் கூட்டணியில் இருந்தும் விலகியுள்ளதால், ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.