”அசல்ல இங்க ஆட்சி நடக்குதா…. இல்லையா?” தமிழக அரசை நோக்கி எடப்பாடி பழனிசாமி வீசிய அனல் பறக்கும் கேள்வி….!!
SeithiSolai Tamil July 14, 2026 06:48 PM

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழகத்தின் தற்போதைய ஆட்சி நிர்வாகம் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “தற்போது தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, மக்கள் பல்வேறு துயரங்களைச் சந்தித்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், உண்மையில் தமிழகத்தில் ஒரு முறையான ஆட்சிதான் நடக்கிறதா என்ற மிகப்பெரிய சந்தேகமே பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது” என்று மிக காரசாரமாகக் குற்றம் சாட்டினார்.

​மேலும் தொடர்ந்து பேசிய அவர், சேலம் மாவட்டத்தில் அதிமுக அதிக இடங்களை வென்று தனது அசைக்க முடியாத பலத்தை நிரூபித்துள்ளதாகக் குறிப்பிட்டார். “அதிமுக என்பது பதவிக்காக இயங்கும் கட்சி அல்ல என்றும்; நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, சாமானிய மக்களின் பிரச்சினைகளுக்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து முதல் ஆளாகக் குரல் கொடுப்பது எப்போதும் அதிமுக மட்டும்தான்” என்றும் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த நேரடித் தாக்குதல் தற்போதைய அரசியல் களத்தில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.