போராட்டத்தில் கைதான மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ங்க.. உச்சநீதிமன்றம் உத்தரவு!
Dinamaalai July 28, 2026 05:48 PM

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். மாணவர்கள் மீது பல்வேறு கடுமையானப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர்களை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு வழக்கில் மிக முக்கிய தீர்ப்பை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர். மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டினர். ஜனநாயக வழியில் போராட்டம் நடத்துவது குடிமக்களின் உரிமை என்றும், அதனை நசுக்கும் வகையில் செயல்படக்கூடாது என்றும் அறிவுறுத்தினர். நீதிமன்றத்தின் இந்த  திடீர்  உத்தரவு கைதான மாணவர்களின் பெற்றோர் மற்றும் சக மாணவர்கள் இடையே பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து மாணவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளைக் காவல் துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர். மாணவர்கள் மீதான வழக்கு விசாரணைகளின் போது சட்டப்பூர்வமான விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் உள்ள மாணவர் அமைப்புகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.