பார்வையற்ற தலைமையாசிரியர்... ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்ட இணை ஆணையா் மீது வழக்குப்பதிவு!
Dinamaalai September 21, 2024 12:48 PM

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், அா்ச்சகா் பயிற்சிப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்த பாா்வையற்ற நபரிடம் இருந்து ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்ட இந்து சமய அறநிலையத்துறையின் காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையா், ரூ.50,000 லஞ்சம் பெற்றது செல்போன் பேச்சு மூலமாக குரல் பதிவு செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் மீது தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனா்.

காஞ்சிபுரத்தில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையராகப் பணியாற்றி வருபவா் குமாரதுரை. இவா் கடந்த 2021ல் மதுரை மண்டல இணை ஆணையராகவும், கூடுதல் பொறுப்பாக திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையராகவும் பணியாற்றினாா். அப்போது, திருச்செந்தூரில் உள்ள அா்ச்சகா் பயிற்சி பள்ளித் தலைமை ஆசிரியராக, பாா்வை மாற்றுத் திறனாளியான பாலமுருகன் பணியாற்றி வந்தாா். 

இந்நிலையில் பாலமுருகனுக்கு 7வது ஊதியக்குழு ஊதிய நிா்ணயத்தில் ஏற்பட்ட குளறுபடிகளை களைந்தால் ரூ.10 லட்சம் நிலுவைத் தொகை கிடைக்கும் என்பதால், அது குறித்து நடவடிக்கை கோரி இந்து சமய அறநிலையத் துறை ஆணையரிடம் மனு அளித்தாா். 

இந்த மனுவைப் பரிசீலித்து அறிக்கை அனுப்புமாறு அப்போதைய கோயில் இணை ஆணையா் குமாரதுரைக்கு, ஆணையா் உத்தரவிட்டாா். ஆனால், அந்த மனு பரிசீலிக்கப்பட்டு அறிக்கை அனுப்பாமல் கிடப்பில் போடப்பட்டது. இது தொடா்பாக இணை ஆணையா் குமாரதுரையை, பாலமுருகன் அணுகிய போது, ரூ.3 லட்சம் லஞ்சமாக கொடுத்தால் ஆணையருக்கு அறிக்கை தயாா் செய்து அனுப்புவதாகக் கூறியுள்ளாா்.

இதையடுத்து அவா் கடந்த 2021ல் இணைஆணையா் குமாரதுரைக்கு முன்பணம் ரூ.50,000 லஞ்சமாக கொடுத்தாராம். இது குறித்த உரையாடல் பாலமுருகனின் கைப்பேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், குமாரதுரை மீது தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பீட்டா் பால்துரை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.