Vikas Yadav: இந்திய ”ரா” அமைப்பின் முன்னாள் அதிகாரியான விகாஷ் யாதவ் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் காலிஸ்தான் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுனை, கொலை செய்ய முயற்சித்ததாக, இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு எனப்படும் “ரா” அமைப்பின் முன்னாள் அதிகாரியான விகாஷ் யாதவ் மீது குற்றச்சாட்டு நிலவுகிறது. இதுதொடர்பாக, அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்காவின் FBI விசாரணை அமைப்பு அறிவித்துள்ளது. மேலும், இவ்வழக்கு தொடர்பாக அமெரிக்க நீதித்துறை (DoJ) குற்றப்பத்திரிகையில் புகைப்படத்துடன் தேடப்படும் குற்றவாளியாக விகாஸ் யாதவை அறிவித்து, அவர் மீது கூலிக்கு கொலை செய்தல், பணமோசடி உள்ளிட்ட குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், விகாஸ் யாதவ் டெல்லியில் சிறப்பு தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.