விஜய் மாநாட்டிற்கு நான் சென்றால்… “தவெக மாநாட்டில் நாதக கொடிதான் பறக்கும்”… சீமான் பரபரப்பு பேச்சு…!!!
SeithiSolai Tamil October 19, 2024 01:48 PM

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ஆம் தேதி விக்ரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான முதல்கட்ட ஆயத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று கட்சி நிர்வாகிகளுக்கு சேலம் மாவட்டத்தில் அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது. இந்த முதல் மாநாட்டின் போது நடிகர் விஜயின் கட்சி கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அறிமுகமாகும் என்பதால் அவருடைய ரசிகர்களும் தொண்டர்களும் முதல் மாநாடு மீது எண்ணற்ற ஆர்வத்தில் இருக்கிறார்கள்.

இருப்பினும் அவ்வப்போது மழை பெய்து வருவதால் முதல் மாநாடு எப்படி நடைபெறும் என்ற சந்தேகங்களும் வருத்தங்களும் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை நேற்று சந்தித்தபோது அவரிடம் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டில் கலந்து கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான் கூறியதாவது, நான் விஜய் மாநாட்டிற்கு செல்வதாக இருந்தால் என் தம்பிகள் என்னை தனியாக அனுப்புவார்களா.? என் பிள்ளைகள் ஆயிரக்கணக்கில் என்னுடன் வருவார்கள்.

அவர்கள் எங்களுடைய கொடியை ஏந்தி வருவார்கள். நான் மேடை ஏறும்போது சீமான் வாழ்க என்று கோஷமிடுவார்கள் . எனவே அது சரியாக இருக்காது. அது விஜய் மாநாடு. அங்கு அவருடைய கொடி மட்டும்தான் பறக்க வேண்டும் என்று கூறினார். மேலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய் மாநாட்டில் கலந்து கொள்ளும்போது கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் கொடி ஏந்தி வருவார்கள் என்பதால் விஜய் மாநாட்டிற்கு தான் செல்லவில்லை என்று பதில் அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.