“நாங்கள் இந்திக்கு ஆதரவாளர்களும் இல்லை; எதிரானவர்களும் இல்லை” - எல்.முருகன்.
Top Tamil News October 19, 2024 09:48 PM

சென்னை மழை வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டதை திசை திருப்பவே, தமிழ்த்தாய் வாழ்த்து தவாறாக பாடிய விவகாரத்தில்  தமிழ்நாடு முதலமைச்சர் ஆளுநர் மீது கருத்து தெரிவித்து வருகிறார் என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.  

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், “சென்னை மழை வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டதை திசை திருப்பவே தமிழ்நாடு முதலமைச்சர் ஆளுநர் விவகாரத்தில் கருத்து தெரிவிக்கிறார். இந்தியா கூட்டணி கட்சிகள் ஒவ்வொரு முறையும் இப்படி தான் திசை திருப்ப திட்டமிடுகின்றனர்.  தமிழை ஐ.நா. சபை வரை கொண்டு சென்ற பெருமை பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்டு. ஆளுநர் நிகழ்ச்சியில் ஏதாவது கிடைக்குமா என்று தேடித்தேடி ஒரு சிறிய தவறை பெரிதுபடுத்தினர். தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிய சிறுவர்கள் மன்னிப்பும் கேட்டு விட்டனர்.  

ஒரு நாள் மழைக்கு சரியான திட்டமிடல் இல்லாததால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.  இதை திசை திருப்பவே இவ்வாறு செய்தனர்.  கூவம் நதி உள்ளிட்ட நதிகளை சீரமைப்பு செய்யாமல் வெள்ளத்தை தடுக்க முடியாது என்ற அடிப்படை சிந்தனை கூட இல்லாமல் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர். டிடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றவர் எப்படி அந்த தவறுக்கு பொறுப்பு ஏற்க முடியும்.  நாங்கள் இந்திக்கு ஆதரவாளர்களும் ; இல்லை எதிரானவர்களும் இல்லை;  திமுகவினர் பிழைப்புக்காக நடத்தும் இந்தி பயிலும் பள்ளி கல்லூரிகளை மூட முடியுமா” என்று கேள்வி எழுப்பினார்.
 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.