ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். இந்த விபத்து நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் காதர்வல்லி (35), நூருல்லா (32), புஜ்ஜம்மா (60), பகீரம்மா (65) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து ராயச்சோட்டி சப்-டிவிஷனல் போலீஸ் அதிகாரி கிருஷ்ண மோகன் கூறுகையில், "பைலாரில் இருந்து ராயச்சோட்டி நோக்கி வந்த பேருந்து, எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியதில், ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் இன்று காலை உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
காயமடைந்த இருவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.பேருந்து சித்தூரில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.