சீட்டுக்கட்டு போல் சரிந்த கட்டிடம்… பயங்கர விபத்தில் 2 தமிழர்கள் உட்பட 8 பேர் பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!
SeithiSolai Tamil October 24, 2024 06:48 AM

பெங்களூருவில் நடந்த கட்டிட விபத்தில் 8 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள பாபுசாப் பாளையாவில் 6 மாடிகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. கனமழையால் பாதிக்கப்பட்ட இந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததால் பல தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மணிகண்டன், சத்யராஜ் ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 20 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 12 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். மீட்பு பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த விபத்து காரணமாக கர்நாடக மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனமழையால் ஏற்பட்ட கட்டிட வீழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் நடப்பதை தடுப்பதற்காக கட்டுமான விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டியது மிகவும் அவசியமாகியுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.