டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசில் 500 காலிப்பணியிடங்கள்.. எப்படி விண்ணப்பிப்பது? நவ.11 கடைசி தேதி!
Dinamaalai October 24, 2024 01:48 PM

பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் காலியாக  உள்ள 500 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிறுவனம் : நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 
மொத்தப்பணியிடங்கள் : 500  
விண்ணப்பிக்க கடைசி தேதி : நவம்பர் 11 


பதவி : உதவியாளர் பணியிடங்கள்  பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 41 இடங்களும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 113 இடங்களும், எஸ்.டி., பிரிவினருக்கு 43 இடங்களும் மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு 33 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு  
வயது வரம்பு : 21  முதல் 30 வயதுக்குள்  
ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் :  ரூ.850

எஸ்.சி., எஸ்.டி., மற்றும் PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100.
தேர்வு முறை :  எழுத்து தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு  
மருத்துவ பரிசோதனை அடிப்படையில் 

விண்ணப்பிக்கும் முறை : https://nationalinsurance.nic.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்க வேண்டும்

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.