மறந்துடாதீங்க... தமிழகம் முழுவதும் அக்.31க்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி!
Dinamaalai October 24, 2024 01:48 PM

மறந்துடாதீங்க... என்னைக்கு இருந்தாலும் உங்க வீட்டிற்கு நீங்கள் சொத்து வரி கட்டித் தான் ஆக வேண்டும். அப்படி கட்டப் போகின்ற சொத்து வரியை அக்டோபர் 31ம் தேதிக்குள் மாநகராட்சி அலுவலகங்களில் செலுத்தினால், சொத்து வரி தொகையில் 5 சதவீதம் தள்ளுபடி சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சொத்து வரி செலுத்துவதில் சலுகை அறிவித்துள்ள நிலையில், தற்போது தமிழகம் முழுவதுமே அக்டோபர் 31க்குள் செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கட்டிடங்களின் உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2024-2025 ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியினை செலுத்த வேண்டும்.

இதுவரை செலுத்தாதவர்கள் இம்மாத இறுதிக்குள் (31.10.2024 ) செலுத்தி தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 5 சதவீதம் தள்ளுபடியினை பெற்று பயன்பெறுமாறும் மாநகராட்சி வளர்ச்சி பணிகளில் தங்களின் பங்களிப்பினை வழங்கிடுமாறும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இது தூத்துக்குடி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே நடைமுறையில் இருக்கிறது. அதனால் உடனே நீங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்திடுங்க.

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.