இன்று காலை 8 மணிக்கு மிஸ் பண்ணாதீங்க.. தீபாவளி சிறப்பு ரயில்கள் முன்பதிவு துவக்கம்!
Dinamaalai October 24, 2024 01:48 PM

இன்று அக்டோபர் 24ம் தேதி காலை 8 மணிக்கு தீபாவளி பண்டிகைக்கான விடுமுறை கால பயணத்திற்கான சிறப்பு ரயில்களுக்கு  முன்பதிவு துவங்குகிறது. இம்மாதம் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பலரும் சொந்த ஊர்களில் தங்களது உற்றார் உறவினர்களோடு பண்டிகையைக் கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர். 

தீபாவளி விடுமுறைக்கான ரயில்களில் முன்பதிவு முடிவடைந்த நிலையில், சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வரப்படுகிறது. சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தீபாவளியையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு ரயிலுக்கான நேரம், இடம் தொடர்பான விவர பட்டியலையும் தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கு அக்.29, நவ.2-ம் தேதிகளில் அதிவிரைவு ரயில் இயக்கப்படும். கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அக்.31, நவ.4-ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். மங்களூருவில் இருந்து சென்னை எழும்பூருக்கு அக்.29-ம் தேதி அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும். சென்னை எழும்பூரில் இருந்து மங்களூருவுக்கு அக்.30-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.