இறுதி சடங்கில் உயிருடன் எழுந்த குழந்தை.. மருத்துவமனை அலட்சியம்.. அடுத்து நடந்த சோகம்!
Dinamaalai October 26, 2024 01:48 AM

பிரேசிலை சேர்ந்த குடும்பத்தினர் 8 மாத குழந்தை கியாரா கிரிஸ்லைன் டி மோரா டோஸ் சாண்டோஸ் வைரஸ் தொற்றுக்கொள்ளாததால் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கியாரா இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனால் மன உளைச்சலில் குடும்பத்தினர் குழந்தையின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது குடும்ப உறுப்பினர்கள் உடலில் அசைவுகள் இருப்பதை கவனித்து மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.குழந்தையை மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கியாரா மீண்டும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை கியாரா குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டது.

முதலில் குழந்தை இறந்து விட்டதாக அறிவித்து தவறு செய்ததை மருத்துவமனை ஒப்புக்கொண்டது. இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.