குடிமகன்களே உஷார்.. பீர் பாட்டிலில் செத்து மிதந்த பல்லி.. அதிர்ச்சியடைந்த இளைஞர்!
Dinamaalai October 26, 2024 03:48 AM

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் குடிக்க பீர் வாங்கியுள்ளார். பீர் குடிக்க ஆசை ஆசையாக திறந்துள்ளார்.அப்போது, பாட்டிலைப் பார்த்தபோது, அதற்குள் ஏதோ மிதப்பது போல் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உற்று பார்த்தபோது, பல்லி கிடந்தது . பீதியடைந்த நபர் அதை வீடியோ எடுத்து வாங்கிய கடைக்கு மீண்டும் கொண்டு வந்து புகார் தெரிவித்தார்.



இது தொடர்பான அந்த வீடியோ  வெளியாகி வைரலாகி வருகிறது. மதுபானங்களை வாங்குபவர்கள் அதில் பூச்சிகள் இருப்பதாக அவ்வப்போது புகார் கூறுவது பொதுவான கதை. தயாரிப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாக, இந்த நடவடிக்கைகள் தொடர்கின்றன. இதனால் குடிமகன்கள் கவனமாக செய்ல்படுவது முக்கியமான ஒன்றாக அறிவுறத்தப்படுகிறது.

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.