கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. 25 வயதான இவர் கேரள மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும் இந்த நபர் குடிக்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு குடிபோதையில் இருந்த கிருஷ்ணமூர்த்தி, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 17 வயது சிறுமி தனியாக இருப்பதை பார்த்தார்.
இதையடுத்து வீட்டுக்குள் புகுந்த அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.