மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் தனது கணவருடன் சுற்றுலா சென்ற இளம்பெண்ணை 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை குர்ஹ் தெஹ்சிலில் உள்ள ஒரு சுற்றுலா ஸ்தலத்தில் உள்ள ஒரு பிரபலமான கோவிலில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள நீர் ஊற்றுக்கு கணவன்-மனைவி தம்பதியினர் வந்துள்ளனர். இந்நிலையில், ஐந்து பேர் அந்த பெண்ணை நீரூற்றுக்கு அருகில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணியளவில் குர்க் காவல் நிலையத்தை அணுகி தம்பதியினர் புகார் அளித்தனர். தன்னை தாக்கியவர்களில் ஒருவர் தனது கைகளிலும் மார்பிலும் பச்சை குத்தியிருந்ததாக அந்த பெண் கூறினார்.
இதுகுறித்து ரேவா தலைமையகத்தின் உதவி கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ஹிமாலி பதக் கூறுகையில், 'அந்தப் பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அவளுக்கும் அவள் கணவருக்கும் வயது 19-20, இன்னும் கல்லூரியில் படிக்கிறார்கள். பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிடாமல் இருக்க கவனமாக இருக்கிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, அன்றைய தினம் இரவு 7 மணிக்கு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் ஒரு பகுதியாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. எங்களது விசாரணை நடந்து வருகிறது. அடையாளம் தெரியாத ஐந்து பேர் மீது பிஎன்எஸ் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது," என்றார்.