கடந்த 1993ம் ஆண்டு ஹிந்தியில் கல் நாயக் என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள சோலி கே பீச்சே கியா ஹே? என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களுக்கு காமெடியாக கூட இதனை பயன்படுத்தி இருப்பார்கள். இந்நிலையில் இந்த பாடலுக்கு நடனமாடிய காரணத்தினால் மணமகளின் தந்தை திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் புதுடெல்லியில் நடந்துள்ளது. பெண் வீட்டாரின் உன்னதமான பங்கை அவமதித்ததால் இத்திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. மணமகன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தும், மணப்பெண் தந்தையிடம் கெஞ்சியும் எந்த பலனும் அளிக்கவில்லை. தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து இந்த பாடலுக்கு நடனம் ஆடியதால் வெறுப்படைந்த பெண்ணின் தந்தை திருமணத்தை நிறுத்தியுள்ளார்.