கடந்த ஒரு வருடமாக கிட்னியை வாங்குபவரை அந்த கணவன் தேடி வந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் கிட்னியை விற்பனை செய்தார்.இதன் மூலம் அவருக்கு 10 லட்ச ரூபாய் கிடைத்தது. ஆனால் இந்த பணத்தை வைத்துக்கொண்டு அவருடைய மனைவியோ முகநூல் மூலம் அறிமுகமான கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னுடைய மனைவி கள்ளக்காதலுடன் சென்றதை அறிந்த கணவர் அவர் இருக்கும் இடத்தை அறிந்து அங்கு சென்றார்.
அப்போது அவர் விரைவில் விவாகரத்து நோட்டீஸ் வழங்குகிறேன் இங்கிருந்து செல்லும்படி கூறிவிட்டார். அந்த கணவன் மன வேதனையில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் இச்சம்பவம் குறிட்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.