#featured_image %name%
தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
||श्री:||
!!श्रीरामजयम!!!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
श्री: श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
தை~ * 25
(7.2.2025) வெள்ளி* கிழமை.*
வருடம் ~ க்ரோதி
{க்ரோதி நாம சம்வத்ஸரம்}.
அயனம்~ உத்தராயணம்
ருது ~ ஹேமந்த ருது.
மாதம்~ * தை மாஸம் { மகர மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 11.30 pm வரை தசமி பின் ஏகாதசி
நாள் ~ {ப்ருஹு வாஸரம்) வெள்ளி கிழமை.
நட்சத்திரம் ~ 8.45 pm வரை ரோஹிணி பின் மிருகசீரிஷம்
யோகம் ~ மாஹேந்திரம்
கரணம் ~ தைதுளை
அமிர்தாதியோகம் ~ அசுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00.
சூரிய உதயம் ~ காலை .6.40
சந்திராஷ்டமம் ~ துலாம்
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்த திதி ~ தசமி
இன்று ~
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..
வெள்ளிக்கிழமை ஹோரை
காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்
பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்
மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
இன்றைய ராசிபலன்கள் – 07.2.2025
மேஷம்மேஷ ராசிக்கான பலன்கள் !
சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். காப்பீடு துறைகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். எழுத்து துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இழுபறியான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : தீர்வுகள் கிடைக்கும்.
பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : மாற்றமான நாள்.
ரிஷப ராசிக்கான பலன்கள் !
குடும்பத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். இழுபறியான சில வரவுகள் மூலம் மனதில் குழப்பமான சூழல் அமையும். பணி நிமித்தமான அலைச்சல் மேம்படும். வியாபார பணிகளில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : வேறுபாடுகள் குறையும்.
ரோகிணி : குழப்பமான நாள்.
மிருகசீரிஷம் : சிந்தித்துச் செயல்படவும்.
மிதுன ராசிக்கான பலன்கள் !
நட்பு வட்டம் விரிவடையும். பொதுப்பணியில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். சேமிப்பு குறித்த சிந்தனைகள் மேம்படும். பணி நிமித்தமான செயல்களில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். தொழில் சார்ந்த முன்னேற்றம் குறித்த சிந்தனைகள் மேம்படும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். அனுபவம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மிருகசீரிஷம் : விவேகத்துடன் செயல்படவும்.
திருவாதிரை : செயல்களில் கவனம்
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
கடக ராசிக்கான பலன்கள் !
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வித்தியாசமான சிந்தனைகள் உருவாகும். இடது கண் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் மேம்படும். தூர தேச பயண எண்ணங்கள் கைகூடிவரும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். அலங்கார விஷயங்களில் ஈர்ப்புகள் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
புனர்பூசம் : நெருக்கம் அதிகரிக்கும்.
பூசம் : ஆர்வம் மேம்படும்.
ஆயில்யம் : ஈர்ப்புகள் ஏற்படும்.
சிம்ம ராசிக்கான பலன்கள் !
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டாகும். சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். முயற்சிக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். நெருக்கடியாக இருந்துவந்த சிக்கல்கள் குறையும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். நிர்வாக திறமைகளால் மேன்மை உண்டாகும். புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : ஆசைகள் நிறைவேறும்.
பூரம் : மதிப்புகள் கிடைக்கும்.
உத்திரம் : சிக்கல்கள் குறையும்.
கன்னி ராசிக்கான பலன்கள் !
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். தடைப்பட்ட சில வேலைகள் நிறைவு பெறும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வியாபார நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு அதிகாரம் மேம்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடி வரும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : சிந்தனைகள் உண்டாகும்.
சித்திரை : அதிகாரம் மேம்படும்.
துலாம் ராசிக்கான பலன்கள் !
வியாபாரத்தில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். சுபகாரிய முயற்சிகள் ஈடேறும். குழந்தைகளின் மேற்படிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். கற்பனைத் திறன் மேம்படும். மறதி பிரச்சனைகள் குறையும். செல்வச்சேர்க்கை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்
சித்திரை : தாமதங்கள் குறையும்.
சுவாதி : பிரச்சனைகள் நீங்கும்.
விசாகம் : தேவைகள் நிறைவேறும்.
விருச்சிக ராசிக்கான பலன்கள் !
பணிகளில் திறமைக்கான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் அவசரப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். வெளி வட்டாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். வரவேண்டிய வரவுகள் தாமதமாக கிடைக்கும். இழுபறியான சில பணிகள் நிறைவு பெறும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
விசாகம் : மதிப்புகள் தாமதமாகும்.
அனுஷம் : விவேகத்துடன் செயல்படவும்.
கேட்டை : கவனம் வேண்டும்.
தனுசு ராசிக்கான பலன்கள் !
உடன் பிறந்தவர்கள் மூலம் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். புதிய அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். தந்தை வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்
மூலம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
பூராடம் : மாற்றம் பிறக்கும்.
உத்திராடம் : அனுகூலமான நாள்.
மகர ராசிக்கான பலன்கள் !
நெருக்கமானவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். மனை விற்பனையில் இழுபறியான சூழல் உண்டாகும். புதிய வாகனம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். வழக்கு செயல்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
திருவோணம் : இழுபறியான நாள்.
அவிட்டம் : முடிவுகள் கிடைக்கும்.
கும்ப ராசிக்கான பலன்கள் !
மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். உயர்கல்வி குறித்த சிந்தனை மேம்படும். ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். வேலையாட்கள் மாற்றத்தில் நிதானம் வேண்டும். உத்தியோகத்தில் அலைச்சல்கள் ஏற்படும். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். சிற்றின்ப செயல்களில் ஆர்வம் ஏற்படும். போட்டி பந்தயங்களில் கவனத்துடன் செயல்படவும். இன்னல்கள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்
அவிட்டம் : சிந்தனை மேம்படும்.
சதயம் : நிதானம் வேண்டும்.
பூரட்டாதி : கவனத்துடன் செயல்படவும்.
மீன ராசிக்கான பலன்கள் !
பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் சார்ந்த பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : மாற்றமான நாள்.
உத்திரட்டாதி : அனுபவம் அதிகரிக்கும்.
ரேவதி : ஒத்துழைப்பான நாள்.
அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).
மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.
மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11
விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.
விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.
News First Appeared in