ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்ற நிலையில் இவரும் கடந்த வருடம் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் அந்த தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் வந்த நிலையில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி என்பது உருவானது பிற கட்சிகள் போட்டியிடவில்லை.
அதன்படி திமுக வேட்பாளராக விசி சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமியும் போட்டியிட்ட நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து திமுக வேட்பாளர் முன்னிலையில் இருக்கும் நிலையில் முதல் சுற்று முடிவிலும் அவர்தான் முன்னிலை வகித்தார். தற்போது இரண்டாம் சுற்று முடிவுகள் வெளியான நிலையில் விசி சந்திரகுமார் 8963 வாக்குகளும் நாம் தமிழர் வேட்பாளர் 2012 வாக்குகளும் பெற்றுள்ளார்.மேலும் இரண்டாம் சுற்றும் முடிவில் 6951 வாக்குகள் வித்தியாசத்தில் விசி சந்திரகுமார் முன்னிலையில் இருக்கிறார்.