தமிழ்நாடே எதிர்பார்ப்பு..! ஈரோடு கிழக்கில் மகுடம் சூட்டப்போவது யார்… இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை…!!
SeithiSolai Tamil February 08, 2025 02:48 PM

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்ற நிலையில் இவரும் கடந்த வருடம் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் அந்த தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் வந்த நிலையில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி என்பது உருவானது பிற கட்சிகள் போட்டியிடவில்லை.

அதன்படி திமுக வேட்பாளராக விசி சந்திரகுமாரும்,நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமியும் போட்டியிட்ட நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இன்று காலை 8மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.மேலும் 17 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்பட இருக்கும் நிலையில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.