ஓரங்கட்டப்பட்ட பிடிஆர்! மீண்டும் பதவி பெற்ற செஞ்சி மஸ்தான்! வெளியான திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்
Top Tamil News February 14, 2025 05:48 AM

2026 சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகிவரும் நிலையில், ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு மாவட்டப் பொறுப்பாளர்களை நியமித்து திமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீண்டும் விழுப்புரம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த தோப்பு வெங்கடாசலம், ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளராகவும், ஆர். லட்சுமணன் விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்

  •  ஈரோடு தெற்கு - அமைச்சர் முத்துசாமி 
  •  ஈரோடு வடக்கு - என்.நல்லசிவம் 
  •  ஈரோடு மத்தி - தோப்பு வெங்கடாசலம் 
  • திருப்பூர் கிழக்கு - க.செல்வராஜ் 
  • திருப்பூர் மேற்கு - அமைச்சர் சாமிநாதன் 
  • திருப்பூர் வடக்கு - என்.தினேஷ் குமார் 
  • திருப்பூர் தெற்கு - இல. பத்மநாபன் 
  • விழுப்புரம் வடக்கு - செஞ்சி மஸ்தான் 
  •  விழுப்புரம் தெற்கு - கெளதம சிகாமணி 
  • விழுப்புரம் மத்தி - ஆர்.லட்சுமணன் 
  • மதுரை வடக்கு - அமைச்சர் மூர்த்தி 
  • மதுரை மாநகர் - கோ.தளபதி 
  • தஞ்சாவூர் தெற்கு - பழனிவேல் 
  • திருநெல்வேலி மத்தி - அப்துல் வகாப் 
  • திருவள்ளூர் கிழக்கு - எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ் 
  • நீலகிரி - கே.எம்.ராஜு

திமுக ஆட்சி அமைத்த 07.05.2021-ம் தேதி அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற செஞ்சி தொகுதி எம்எல்ஏவான மஸ்தான், கடந்த ஆண்டு அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் என்பது நினைவுக்கூரதக்கது.

இதேபோல் மதுரை மாவட்ட திமுகவில் மீண்டும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஓரங்கட்டப்பட்டு உள்ளார். மாவட்டச் செயலாளர் பொறுப்பு விவகாரத்தில் தொடங்கி, தொடர்ந்து கோ.தளபதியுடன் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், மதுரை மத்திய தொகுதிக்கான பொறுப்பாளராக கோ.தளபதி நியமிக்கப்பட்டுள்ளார்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.