ஷாக் வீடியோ.. துப்பாக்கி முனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. தட்டிக்கேட்ட இளைஞரை துப்பாக்கியால் சுட்ட போலீஸ்!
Dinamaalai February 15, 2025 11:48 PM

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இளம் பெண்ணை காவலர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த நாளில், முகமது அகமது என்ற காவலர் ஒரு பெண்ணை ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு, அந்தப் பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். இதையடுத்து, அந்தப் பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கு ஓடிய இளைஞர் ஒருவர், அந்த சம்பவத்தை தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தார். அந்த வீடியோவில், அந்தப் பெண் அரை நிர்வாணமாக அமர்ந்திருக்கிறார், காவலர் அரை நிர்வாணமாக நிற்கிறார்.


இதையடுத்து, நீதி கேட்ட இளைஞரை காவலர் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அந்த இளைஞர் காயமடைந்தார். இதையடுத்து, துப்பாக்கிச் சூடு சத்தத்தைக் கேட்ட கிராம மக்கள் காயமடைந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். காவலர் மீது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், காவலர் கைது செய்யப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.