மக்களே உஷார்..! இட்லி சாப்பிட்டால் கேன்சர் வருமாம்..!
Newstm Tamil March 02, 2025 10:48 AM

கர்நாடக சுகாதார துறை சார்பில் அம்மாநிலத்தில் உள்ள கடைகளில் தயாரிக்கப்படும் இட்லி மாதிரிகள் எடுத்து கொள்ளப்பட்டது. அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனா். ஆய்வு முடிவில் தான் பெரும் அதிர்ச்சி கார்த்திருந்துள்ளது. சுமார் 200 மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவற்றில் 51 இட்லி மாதிரிகள் கேன்சர் உருவாக்கும் காரணிகள் நிரைந்தவையாக உள்ளது தெரிந்தது. இதற்கு காரணம் ஆய்வில் தோல்வி அடைந் இட்லிகள் பாலித்தீன் கவர்களை கொண்டு தயாரிக்கப்பட்டவை என்பதாகும்.

கர்நாடக அரசின் சுகாதார துறையின் கீழ் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, பெங்களூரு உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள சாலையோர வியாபாரிகள், சிறிய கடைகளில் விற்பனைக்கு வைக்கப்படும் இட்லிகளை கொண்டு நடத்தப்பட்டது. பெங்களூரு வாசிகள் தினமும் சாப்பிடும் இட்லி உயிரை கொல்லும் கான்சர் நோயை உருவாக்கி வருவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆய்வு முடிவுகள் வெளியான நிலையில் உடடினயாக சுகாதார துறை சார்பில் தடை உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கர்நாடக அரசு, மாநிலம் முழுவதும் இட்லி கடைகளில் பாலித்தீன் கவர்களை பயன்படுத்த தடை விதித்தது. மேலும் தடை மீறி பாலிதீன் கவர்களில் இட்லி தயாரித்தால் கடும் நடவடிக்கை எனவும் எச்சரித்து உள்ளது.

எனினும் சில கடை வியாபாரிகள் தடை உத்தரவை மீறியும் பாலிதீன் கவர்களை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுகிறது. பொதுமக்களின் உயிருடன் விளையாடும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பாலிதீன் கவர்களுக்கு தடை விதித்ததற்கு கர்நாடக அரசுக்கு வியாபாரிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கங்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனா். கர்நாடகத்தில் ஏற்கனவே பஞ்சுமிட்டாய், மஞ்சூரியன் உள்ளிட்ட உணவு பொருள்களில் செயற்கை நிறமிகளை பயன்படுத்த தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.