தெலுங்கானாவில் ராய்துர்கம் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் சரத் சந்திரா- தேவிகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 மாதங்கள் ஆகின்றன. இதில் தேவிகா சாஃப்ட்வேர் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தேவிகாவை அவரது கணவர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார். கணவரின் தாங்க முடியாத கொடுமையால் தேவிகா கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அவரது கணவர் காவல்துறையினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தார்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தேவிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் தேவிகாவின் குடும்பத்தினர் சரத் சந்திரா வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் தான் தங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டார் என்று புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.