இது குறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் பௌர்ணமி கிரிவலத்தில் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்பார்கள் என்பதால், பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
அதன்படி விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து இன்று மார்ச் 13ம் தேதி வியாழக்கிழமை காலை 9.25 மணிக்கு புறப்படும் விழுப்புரம்- திருவண்ணாமலை சிறப்பு ரயில் (வண்டி எண் 06130) காலை 11.10 மணிக்கு திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை சென்றடையும்.
இதே போல் மறுமார்க்கத்தில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இருந்து இன்று பகல் 12.40 மணிக்கு புறப்படும் திருவண்ணாமலை- விழுப்புரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 06129) மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும். இந்த 2 ரெயில்களும் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ரயில் நிலையங்களில் நின்றுசெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.