இந்தியா முழுவதும் மார்ச் 24, 25 தேதிகள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!
Dinamaalai March 16, 2025 12:48 AM

இந்தியா முழுவதும் மார்ச் 24 மற்றும் 25ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வதாக வங்கி ஊழியர் சங்கங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. பொதுத்துறை வங்கிகளில் உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். வாரத்தில் 5 நாள் வேலை, பணித்திறனை ஆய்வு செய்வதை ரத்து செய்தல், பணிக்கொடை உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வங்கி சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. 

இந்த வேலைநிறுத்த அறிவிப்பிற்குப் பிறகு  இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் ஐக்கிய கூட்டமைப்பு  பேச்சுவார்த்தைக்காக சந்தித்துள்ளனர்.  முக்கிய கோரிக்கைகள் மீது எந்த சமரசமும் ஏற்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக வங்கி சங்கங்கள் தெரிவித்துள்ளன.ஐக்கிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எல். சந்திரசேகர், IBA எவ்வித முக்கிய கோரிக்கைகளையும் ஏற்க மறுத்ததால், வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்துள்ளார். 

பேச்சு வார்த்தையின் தோல்வியால் மார்ச் 24, 25 நாட்களிலான வேலைநிறுத்தம் உறுதியாகும், இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கி ஊழியர்கள் தங்களுடைய சம்பள உயர்வு, ஓய்வூதிய உரிமைகள் மற்றும் பணிப்பழுதுகள் குறித்த கோரிக்கைகளை அரசு மற்றும் வங்கி நிர்வாகங்கள் ஏற்கும்வரை போராட்டத்தை தொடர்வோம் என வங்கி சங்கங்கள் தெரிவித்துள்ளன.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.