மும்பை மாநிலம் பாந்திரா கே.சி. சாலையிலுள்ள குடிசை பகுதிஒன்று உள்ளது. அப்பகுதியில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.
இதன்பேரில் காவலர்கள் குறிப்பிட்ட குடிசை வீட்டுக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.இந்த விரைவு சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 286 கிலோ எடையுள்ள கஞ்சாவை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இவற்றின் மதிப்பு ரூ.71,68,000 ஆகும்.
இதுகுறித்து காவளர்கள் வழக்குப்பதிவு செய்து போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த இம்ரான் கமாலூதீன் அன்சாரி என்னும் 36 வயதான நபர்.சந்தேகத்தின் பெயரில் பிடித்து கைது செய்தனர்.
மேலும் இது தொடர்பாக காவலர்கள், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கு வரைவில் தீர்வு காண்போம் என பதிலளித்துள்ளார்.