துபாயின் இளவரசராகவும், அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பணியாற்றி வரும் ஷேக் ஹம்தான் பின் முஹம்மது, தனது நான்காவது குழந்தையான ஒரு பெண் குழந்தையின் பிறப்பை இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். “அல்லாஹ் அவருக்கு உன் நேசத்தால் நிரம்பிய ஒரு இதயத்தையும், உன்னை நினைக்கும் நாவையும் அருள்வாய். உன் ஒளியிலும் வழிகாட்டலிலும் அவரை மேம்படுத்தி, நலத்தையும் ஆரோக்கியத்தையும் தரும் ஆடையை அணிவிப்பாயாக” என பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
இந்தக் குழந்தைக்கு ‘ஹிந்த் பிண்ட் ஹம்தான் பின் முஹம்மது அல் மக்தூம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஷேக் ஹம்தானின் தாயார் ஷெய்கா ஹிந்த் பிண்ட் மக்தூமுக்கான மரியாதையாகும். ஏற்கனவே 2021 மே மாதத்தில் ராஷித் மற்றும் ஷெய்கா என இரட்டையர் பிறந்துள்ளனர். 2023 பிப்ரவரியில் மகன் முஹம்மது பிறந்தார். இளவரசராக இருந்தாலும், ஷேக் ஹம்தான் தனது உடல் ஆரோக்கியம் மற்றும் சாகச பயணங்களில் ஆர்வமுள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தனது மகன் ராஷித்துடன் ஒரு பயிற்சி புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருந்தார்.