உஷார்... ஏப்ரல் 3ம் தேதி முதல் வெளிநாட்டு கார்களுக்கு 25 % வரி... ட்ரம்ப் அடுத்த அதிரடி!
Dinamaalai March 28, 2025 02:48 PM

ஏப்ரல் 3ம் தேதி முதல் வெளிநாட்டு கார்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளர். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அந்த வகையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு கார்கள் மற்றும் அதன் உதிரிபாகங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப்  அறிவித்துள்ளார்.

இந்த புதிய உத்தரவு ஏப்ரல் 3, 2025 முதல் நடைமுறைக்கு வரும் என  தகவல்கள் தெரிவிக்கின்றன. “அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படாத எல்லா கார்களுக்கும் இந்த 25% வரி பொருந்தும்” என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

“இது அமெரிக்க தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முடிவு. வெளிநாட்டு நிறுவனங்கள் இனி அமெரிக்காவில் தொழிற்சாலைகளை அமைத்து உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்” என டிரம்ப் தனது உரையில் குறிப்பிட்டு பேசியுள்ளார்.  இந்த முடிவு அமெரிக்க உள்நாட்டு வாகனத் தொழிலை பலப்படுத்துவதற்காகவும், உள்ளூர் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்காகவும் எடுக்கப்பட்டு இருப்பதாக  வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. டிரம்ப் போட்டுள்ள இந்த முக்கிய உத்தரவு  உலகளாவிய வாகனத் தொழிலிலும், சர்வதேச வர்த்தக உறவுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடா, மெக்ஸிகோ, ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனி  நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் கார்கள் இந்த வரி உயர்வால் நேரடியாக பாதிக்கப்படும்.

இந்த முடிவு குறித்து பொருளாதார நிபுணர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  “இந்த வரி உயர்வால் வாகனங்களின் விலை கணிசமாக உயரும். இது அமெரிக்க நுகர்வோருக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும்” என பொருளாதார ஆய்வாளர் ஜான் ஹாரிஸ் தெரிவித்தார். மேலும், “வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு கார்களை ஏற்றுமதி செய்வதை குறைத்தால், அது உலகளாவிய விநியோக சங்கிலியை பாதிக்கும்” என எச்சரிக்க விடுத்துள்ளார்.  

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “இது எங்கள் நாட்டு தொழிலாளர்கள் மீதான நேரடி தாக்குதல். அமெரிக்காவுடனான எங்கள் வர்த்தக உறவு பாதிக்கப்படும்” என்று கடுமையாக விமர்சித்தார். ஐரோப்பிய ஒன்றியமும் இந்த முடிவை கண்டித்துள்ளது. “இது சர்வதேச வர்த்தக விதிகளுக்கு எதிரானது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக நாங்களும் வரி உயர்வை பரிசீலிப்போம்” என்று ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெய்ன் தெரிவித்தார்.

இருப்பினும், டிரம்ப் நிர்வாகம் இதை “அமெரிக்காவை மீண்டும் பெரியதாக்கும்” திட்டத்தின் ஒரு பகுதியாக இத்தனை பார்க்கிறது. ஏனென்றால்,  “வெளிநாட்டு கார்களுக்கு வரி விதிப்பதன் மூலம், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். இது நமது தொழிலாளர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்” எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.