நாட்டின் உன்னதமான கலாச்சாரம் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீடியோ மூலம் உரையாற்றிய நடிகர் ரஜினிகாந்த், “செல்போன் யுகத்தில் இளைஞர்கள் பாரத நாட்டின் கலாச்சாரம், பெருமைகள் தெரியாமல் உள்ளனர். இன்றைய இந்திய இளைஞர்கள் நமது கலாச்சார பெருமையை பற்றிய அறிவில்லாமல் மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கியுள்ளனர். மேற்கத்திய நாட்டு மக்கள் அவர்களது கலாச்சாரத்தில் நிம்மதி கிடைக்கவில்லை என இந்தியா வருகிறார்கள். நாட்டின் உன்னதமான கலாச்சாரம் இளைஞர்களிடம் சேர்க்கப்பட வேண்டும். இளைஞர்கள் நாட்டின் கலாச்சாரம் தெரியாமல் உள்ளனர்.