“அவங்களால எப்போவும் மறக்க முடியாது….” இந்தியாவுக்கு பதிலடியும் கொடுக்க தெரியும்… பாதுகாப்புத்துறை அமைச்ஹ்க்கர் ராஜ்நாத் சிங் பேச்சு….!!
SeithiSolai Tamil May 15, 2025 08:48 PM

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது.

அதன் பிறகு பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்திய போது பாகிஸ்தானின் அனைத்து முயற்சிகளையும் இந்தியாவின் பாதுகாப்பு படைகள் தகர்த்தெறிந்தன.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் கூறியதாவது, எதிரிகளை நாம் வீழ்த்திய விதத்தை அவர்களால் எப்போதும் மறக்க முடியாது; தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் இதுதான் பெரியது. பாதுகாத்துக் கொள்ள மட்டுமல்ல, இந்தியாவுக்கு பதிலடியும் கொடுக்க தெரியும் என ஆபரேஷன் சிந்தூர் நிரூபித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.