புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் அம்பேத்கர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொள்வதற்கு முன்னதாக அங்கு அமைக்கப்பட்ட விழா மேடையில் கலைஞர் ஒருவர் திமுக பாடலை பாட வந்தார்.
இந்நிலையில், அம்பேத்கர் பாடலை தான் பாட வேண்டும் எனக் கூறி வீசிகவினர் பேரிகாடுகளை இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்த நிலையில் அதற்குப் பிறகு பாடல் பாடும் நிகழ்ச்சியே ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.