வாலி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தேவி ப்ரியா. படங்கள் தவிர்த்து சின்னத்திரையிலும் படுபிசியாக இருந்து வரும் தேவி ப்ரியா வாலி படத்தில் நடித்தது பற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார்.
தேவி ப்ரியா கூறியதாவது,
என்னுடைய ஒயிட் சாக்லேட் பாய். அஜித் சாரை நான் அப்பொழுதே ஒயிட் சாக்லேட் பாய்னு தான் கூப்பிடுவேன். ஷாட்டுக்கு வரும்போது சும்மா தண்ணீரை எடுத்து முகத்தில் ஊத்திவிட்டு வருவார். ஆனால் பனியில் பூத்த பூ மாதிரி இருப்பார். ரொம்ப நல்ல ஜென்டில்மேன். மிகவும் தன்மையானவர். அவருடன் சேர்ந்து நடித்ததில் ரொம்ப சந்தோஷம். சிம்ரன் மேடம் ரொம்ப ஸ்வீட் அன்ட் க்யூட். சிம்ரன் மேடத்துடன் சேர்ந்து இரண்டு படங்களில் நடித்தேன். இப்பவும் என்னை பார்த்தால் ஹாய் சொல்வதுடன் ஹக் பண்ணுவாங்க. அவங்க ரொம்ப ரொம்ப ஸ்வீட் என்றார்.
வாலி படத்தில் மாற்றுத் திறனாளியாக நடித்த அஜித் குமாரிடம் வேலைக்கு சேர இன்டர்வியூவுக்கு வருவார் தேவி ப்ரியா. அஜித் தன் அறையில் சும்மா அமர்ந்திருப்பார். அதை பார்த்துவிட்டு தண்டன் முண்டம்னு திட்டுவார் தேவி. இதையடுத்து உள்ளே அவரை வரச்சொல்லி வெளியே உட்கார்ந்து என்ன சொன்னீங்களோ அதை அப்படியே சொல்லுங்கனு கேட்பார் அஜித்.
அந்த இன்டர்வியூ காட்சி மிகவும் பிரபலமானது. அந்த காட்சியில் வந்தவர் தான் தேவி ப்ரியா. அஜித் குமாருக்கு ஒயிட் சாக்லேட் பாய்னு இதுவரை யாரும் பெயர் வைத்தது இல்லை. இந்நிலையில் தேவி ப்ரியா சொன்ன அந்த பெயர் அஜித் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
அஜித் பற்றி தேவி ப்ரியா சொன்னது சரி தான். அவருக்கு இருக்கும் கலருக்கு மேக்கப் போடாமல் வந்து கேமரா முன்பு நின்றாலே ஜொலிக்கத் தான் செய்வார் என்கிறார்கள் ரசிகர்கள்.
இந்த ஆண்டு அஜித் குமாருக்கு நல்ல ஆண்டு என்றே சொல்ல வேண்டும். ஜனவரி மாதம் துவங்கியதில் இருந்து தொடர்ந்து கார் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறார். அஜித் குமார் ரேஸிங் அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.
மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படம் மாபெரும் வெற்றி பெற்றது.இதையடுத்து கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருவதால் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டார் அஜித் குமார் என தகவல் வெளியாகி வைரலானது. ஆனால் அந்த தகவல் வெறும் வதந்தியே.
படங்களில் நடிப்பதை நிறுத்தப் போவது இல்லை அஜித் குமார். அவரின் அடுத்த படம் அதாவது ஏ.கே. 65 படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் துவங்கவிருக்கிறது. 2026ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.
இதற்கிடையே வெளிநாடுகளில் தான் கார் பந்தயங்கள் நடக்கிறது என்றாலும் அஜித் குமார் கலந்து கொள்வதை அறிந்து அவரை பார்க்கவே பெரிய கூட்டம் கூடிவிடுகிறது. இதனால் அஜித் குமார் ரேஸிங் அணிந்து கலந்து கொள்ளும் போட்டிகளில் ஸ்டேடியத்தில் கூட்டத்திற்கு குறைவே இல்லாமல் இருக்கிறது.
அஜித் எனும் தனி நபருக்காக மக்கள் கூடுவது குறித்த கார் பந்தய கமெண்ட்ரியில் தொடர்ந்து தெரிவிக்கப்படுகிறது. அந்த கமெண்ட்ரிகளை ஷேர் செய்து எங்க அஜித்துக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்தீர்களா என ஏ.கே. ரசிகர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.