திமுக கட்சியின் பொதுக்கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத கலவரங்கள் உண்டாகும். அவர்கள் மக்களை அனைத்து வகையிலும் பிளவுபடுத்துவார்கள். நம்முடைய குழந்தைகளை படிக்க விடமாட்டார்கள். நம்மை பிற்போக்கு தனங்களில் மூழ்கடிப்பதோடு தொழில் வளர்ச்சி இருக்காது.
ஹிந்தி மொழி திணிப்பு மற்றும் பண்பாட்டு திணிப்பு என தமிழ்நாட்டின் தனித்துவத்தை அவர்கள் அழித்துவிடுவார்கள். ஜூன் முதல் வாரத்தில் இருந்து கழக நிர்வாகிகளை நான் தனித்தனியாக சந்திக்க இருக்கிறேன். அப்போது விரிவாக பேசலாம்.
திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் வரை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை டெல்லியிடம் ஒருபோதும் தமிழ்நாடு வீழாது. தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும். நான் டிவி பார்த்தால் கூட நியூஸ் சேனல் மட்டும்தான் பார்ப்பேன். அதேபோன்று சோசியல் மீடியா பார்த்தால் கூட அரசியல் பற்றி மட்டும் தான் பார்ப்பேன். மேலும் பொதுக்குழு கூட்டத்தில் தொடங்கிய இந்த பயணத்தை சட்டமன்ற தேர்தலில் வெற்றியோடு நிறைவு செய்ய வேண்டும் என்று கூறினார்.
அதன் பிறகு கண்டிப்பாக அடுத்து வரும் தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று ஏழாவது முறையாக ஆட்சி அமைக்கும். என்னை பொருத்தவரையில் பணிவு தான் தலைமை பண்பின் அடையாளம். எந்த அளவுக்கு நாம் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு கழகத்தில் புது ரத்தம் பாயும். எனக்கு எந்த காலத்திலும் ஆணவமும் மமதையோ வராது.
அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்த அமைச்சர் அறிவித்த போது எதுவுமே பேசாமல் பவ்யமாக எடப்பாடி பழனிச்சாமி அமர்ந்திருந்தார். என்ன ஒரு அடக்கம். சசிகலா இவரை முதலமைச்சர் ஆக அறிவித்த போது எப்படி எல்லாம் ஆக்சன் செய்தாரோ அதே மாதிரி நடிப்பு. என்ன காலில் மட்டும் தான் விழவில்லை. அதை தனியாக செய்தார்களா என்பது தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக பாஜகவின் கண்ட்ரோலுக்கு அதிமுக சென்று விட்டது. அதனால்தான் அமித்ஷா இங்கு அடிக்கடி வருகிறார். நான் முன்பு சொன்ன மாதிரி எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. எப்போதுமே தமிழ்நாடு டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான். மேலும் திமுக கொண்டு வந்த திட்டங்களால் ஏராளமான மக்கள் பயன்பெற்றுள்ளனர் என்று கூறினார்.