உத்தரபிரதேசம் காசியாபாத்தின் ராஜ்நகர் எக்ஸ்டென்ஷனில் உள்ள ஒரு உணவகத்தில், சனிக்கிழமை இரவு சிலர் லத்தி மற்றும் இரும்புக்கம்பிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
சம்பவத்தின் போது உணவகத்தில் குடும்பத்துடன் உணவருந்த வந்தவர்களில் பலர் பயந்து ஓடினர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில், கடந்த வியாழக்கிழமை இரவு சிஹானி பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ‘அப்னி ரசோய்’ உணவகத்தில் உணவருந்த வந்தனர்.
உணவு தாமதமாக வழங்கப்பட்டதையடுத்து ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் சமாதானமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் சனிக்கிழமை இரவு, சிலர் திட்டமிட்டு உணவகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
உணவக உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்யப்பட்டதுஇந்த சம்பவம் உணவகங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.