அதுவும் ஒரு சில நாட்களில், நெருக்கடியான நிதி தேவை ஏற்பட்டால், தற்போது ஆதார் அட்டை மூலம் ரூ.10,000 வரை கடனைப் பெறுவது மிகவும் எளிதாக்கியுள்ளன. வங்கிகள் மற்றும் NBFC நிறுவனங்கள் ஆதார் அடிப்படையிலான கடன்களை வழங்க ஆரம்பித்துள்ளன. இந்த கடன் பாதுகாப்பற்றது என்பதால், எந்தவிதமான சொத்து உத்தரவாதம் தேவைப்படுவதில்லை.
இதன் மூலம் மாதச்சம்பளதாரர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு ஏற்ற விரைவான நிதி ஆதாரமாக செயல்படுகிறது. e-KYC வாயிலாக, சில நாட்களுக்குள் பணம் கணக்கில் வரவு செய்யப்படுகிறது.
தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள் :
இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
வயது 21 – அதிகபட்சம் 65 வரை.
மாத வருமானம் குறைந்தது ரூ.25,000 ஆக இருக்க வேண்டும்.
கிரெடிட் ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல்நிரந்தர முகவரி
ஆதார் அட்டை பான், வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆதார் அட்டை, பான் கார்டு / வாக்காளர் ஐடி / ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு விவரங்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கட்டாயம் தேவை.
ஆன்லைன் நடைமுறைகள் மூலமே எளிதாக விண்ணப்பிக்கலாம்.
ஆதார் மூலம் கடன் வழங்கும் நிறுவனத்தின் இணையதளத்திற்குச் செல்லவும். அல்லது செயலியை பதிவிறக்கவும்.
தனிநபர் கடன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும். பின்னர் ஆதார் எண் மற்றும் தகவல்களை உள்ளீடு செய்யவும். அடுத்து கொடுக்கப்படும் OTP மூலம் e-KYC ஐ நிறைவு செய்யவும். அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின், 2–3 நாட்களில் பணம் வங்கிக் கணக்கில் வரவு செய்யப்படும்.
ஆதார் உங்கள் பான் மற்றும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால், கூடுதல் ஆவணங்கள் தேவைப்படாது.
ஏற்கனவே ஏதேனும் கடன் மோசடி புகார்கள் இருந்தால், இக்கடனுக்கு தகுதியில்லை .
இந்த வாய்ப்பை பயன்படுத்தி நெருக்கடியான நேரங்களில் யாரையும் தொடர்பு கொள்ளாமலும், வட்டி இல்லாத உரிமையுடனும் பணத்தை பெறலாம்.