சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ மிகவும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், ஒரு தந்தை தனது சிறு மகனுடன் சாலையோரத்தில் அமர்ந்திருப்பதைக் காணலாம். அவர்கள் எதிர்பார்ப்பது, காய்கறி விற்பனையாளர் ஒருவர் தனது விற்பனைக்குப் பின் மீதமுள்ள காய்கறிகளை அங்கேயே வீசுவாரா என்பது தான். உணவுக்காக இந்த அளவிற்கு காத்திருக்கும் இவர்களின் நிலை, பார்ப்போரின் கண்களில் கண்ணீர் வரவழைக்கும் வகையில் உள்ளது.
சில நிமிடங்களில், தெருவோர வியாபாரி ஒருவர் தனது அழுகிய காய்கறிகளை சாலையில் எறிவதை பார்த்த அந்த நபர் உடனே எழுந்து சென்று அவற்றை எடுத்துச் செல்கிறார். அந்த காய்கறிகளை ஒரு சாக்குப் பையில் நிரப்பி, தனது சைக்கிளில் வைத்து வீட்டிற்குப் புறப்பட்டு செல்லும் காட்சி மனதை கலங்க வைக்கிறது. இந்த வீடியோ, உணவுக்காக எவ்வளவு போராட வேண்டிய நிலை மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை துல்லியமாகக் காட்டுகிறது.
இந்த வீடியோ @frames_n_fork என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் பெற்று வைரலாகி வருகிறது. பொதுமக்கள் இதைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டுள்ளனர். ஒருவர், “அந்தக் குழந்தையும் தந்தையுடன் உணவுக்காக சென்றுள்ளது… மனதை பதைத்தது” என குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “இதைப் பார்த்தபின் நாங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள் என்பதைத்தான் உணர்கிறேன்” என பகிர்ந்துள்ளார்.
வீடியோவின் முக்கிய செய்தி – “ஒருவரின் குப்பை வேறொருவருக்குப் புதையல்” என்பதைக் குறிப்பிடும் வகையில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். நமக்கு எளிமையாகக் கிடைக்கும் உணவு, மற்றொருவருக்கு கனவுக்கூட எட்ட முடியாத விஷயமாக இருக்கலாம் என்பதை இந்த வீடியோ மீண்டும் நினைவுபடுத்துகிறது. மேலும் உணவின் மதிப்பு மற்றும் வாழ்க்கையின் நிஜங்களை உணர்த்தும் இக்காட்சி, சமூக அக்கறையையும் மனித பரிவையும் பரப்பும் பணியில் பெரும் பங்களிப்பாக உள்ளது.
View this post on Instagram