சொல்லியும் கேட்கலையே.... தந்தை கீழே போட்ட பீடித்துண்டை வாயில் போட்ட 10 மாத குழந்தை துடிதுடித்து பலி!
Dinamaalai June 19, 2025 02:48 PM


கர்நாடக மாநிலம் மங்களூர் டவுன்  அடையாறு பகுதியில்  வசித்து வருபவர் பீகாரை சேர்ந்த தம்பதி. இவரது  10 மாத குழந்தை அனீஷ் குமார். அந்தக் குழந்தையின் தந்தை ஒரு திருமண அலங்கார பணியாளராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு பீடி புகைக்கும் பழக்கம் இருந்ததால்  அதை புகைத்த பின் மீதமுள்ள துண்டுகளை வீட்டில் அப்படியே போட்டுவிடும் பழக்கமும் இருந்தது.


சம்பவம் நடைபெற்ற நாளில்  வழக்கம்போல் பீடி புகைத்த தந்தை, மீதமிருந்த பீடியை வீட்டுக்குள் போட்டு சென்றுவிட்டார். 10 மாத குழந்தையான அனீஷ், அந்த பீடியை எடுத்து வாய்க்குள்  போட்டுவிட்டான்.பீடித்துண்டு தொண்டையில் சிக்கிக் கொண்டதால் குழந்தைக்கு கடுமையான  மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தாயும் தந்தையும் அதிர்ச்சியடைந்து உடனடியாக குழந்தையை அருகிலுள்ள  அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் குழந்தையின் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது.  


குழந்தையை இழந்த தாயார், கணவரின் அலட்சியமே காரணம் எனக் கூறி  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். “அவரிடம் வீட்டில் பீடித்துண்டுகளை போடாதீர்கள் என எத்தனையோ முறை சொல்லியிருக்கிறேன். குழந்தை தவழ்ந்து நடக்க ஆரம்பித்ததிலிருந்து கீழே கிடப்பதையெல்லாம் வாயில் போடுகிறது. ஏற்கனவே ஒரு முறை இப்படியே நடந்திருக்கிறது. ஆனால் இப்போது என் மகனை இழந்துவிட்டேன்” எனக் கூறி கதறி அழுதார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.