நிலத்தைப் பார்த்தாலே பயம்… கடலோடு வாழ்ந்து, கடலிலே இறக்கும் அதிசய பழங்குடியினர்… வினோத தகவல்..!!!
SeithiSolai Tamil June 19, 2025 05:48 PM

உலகம் முழுவதிலும் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றும் பழங்குடியின மக்கள் இன்றும் இருந்து வருகின்றனர். அவர்கள் நகர்ப்புற நவீன நாகரீக காலத்தில் இருந்து தங்களை தனிமைப்படுத்தி வாழ்ந்து வருகின்றனர். அதேபோன்று வாழ்பவர்களில் இந்தோனேஷியா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸின் கடலோரப் பகுதிகளை சேர்ந்த பஜாவ் பழங்குடியின மக்களும் ஒருவர்கள்.

இவர்கள் தங்களது வாழ்க்கையின் பெரும் பகுதியை கடலிலேயே கழித்து விடுகின்றனர். இவர்கள் நிலத்திற்கு வருவது மிக அரிதான செயலாகும். பஜாவ் இன மக்கள் குறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது, இவர்கள் அசாதாரணமான டைவிங் திறன்களை பெற்றவர்கள். நவீன டைவிங் உபகரணங்கள் எதையும் பயன்படுத்தாமலேயே நீருக்கடியில் சுமார் 5 முதல் 15 நிமிடங்கள் வரை மூச்சை பிடித்து கொண்டு நீந்துவர்.

மேலும் கடலுக்கடியில் சுமார் 20- 30 மீட்டர் ஆழத்திற்கு டைவ் அடிக்கும் திறன் கொண்டவர்கள். இதற்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுவது, சாதாரண மக்களை விட 50% பெரிய மண்ணீரலை பஜாவ் இன மக்கள் கொண்டுள்ளனர். இதுவே அவர்கள் ஆழமாகவும், நீண்ட தொலைவிலும் டைவ் அடிக்க முக்கியமான காரணமாகும்.

இது மரபணு மாறுபாட்டின் காரணம் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பஜாவ் இன மக்கள் சிறுவயது முதலே நீச்சல் மற்றும் டைவடிக்கும் திறமைகளை கற்றுக் கொள்கிறார்கள். இவர்களுக்கு கடல் என்பதுதான் வாழ்வாதாரம்.

மேலும் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட மரக்கண்ணாடிகள் மற்றும் கைவினை ஈட்டிகளை பயன்படுத்தி மீன், ஆக்டோபஸ் மற்றும் பிற கடல் வாழ் உயிரினங்களையும் வேட்டையாடி உண்டு வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் இவர்கள் கடலிலே லெபா- லெபா எனப்படும் மர படகுகளை தயாரித்து அவற்றை வீடுகளாக பயன்படுத்தி வாழ்ந்து வருகின்றனர் அவ்வபோது பருவ காலம் மாறுபாட்டை அடுத்து தீவுகளுக்கு இடையிலும் வாழ்ந்து வருகின்றனர். மீன் பிடித்தலை மட்டுமே நம்பி வாழும் ஒரு இன கூட்டம் ஆகும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.