கார்த்தி தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி நடிகர் ஆவார். இவரது தந்தை சிவகுமார் மூத்த நடிகர் மற்றும் இவரது சகோதரர் சூர்யாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் நுழைந்து மணிரத்தினம் இயக்கிய ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் கார்த்தி.
அதைத்தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் கார்த்தி. முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்து அனைவரையும் பாராட்டுகளையும் பெற்று தந்தது. தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி மெட்ராஸ், போன்ற ஹிட் படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வளம் வந்தார் கார்த்தி.
பின்னர் கடைக்குட்டி சிங்கம், கைதி, சுல்தான் போன்ற நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தார் கார்த்தி. இது மட்டுமல்லாமல் பொன்னின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பல ரசிகர்களை பெற்றார். தற்போது பிஸியான நடிகராக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார் கார்த்தி.
இந்நிலையில் விகடன் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட கார்த்தியிடம் நீங்கள் இயக்குனராவது எப்போது அப்படி ஒரு ஆசை இருக்கிறதா என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த கார்த்தி, நம்மகிட்ட நல்ல கதை இருக்கணும் கதை இருந்தால் தான் அந்த கதையை சொல்லணும் என்கிற ஆசையில் இயக்குனர் ஆகணும்னு தோணும். நம்ம தமிழ் சினிமால மாரி செல்வராஜ் போன்ற நல்ல நல்ல இயக்குனர்கள் இருக்கிறார்கள். அப்போது எதற்கு நான் இயக்குனராக வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கூறியிருக்கிறார் கார்த்தி.