தர்மபுரி மாவட்டம் அந்தியூர் பகுதியில் முத்து – சுகன்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் முடிந்து 16 ஆண்டுகள் ஆகும் நிலையில் 10 ம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே வசித்து வருகிறார்கள்.
அதில் சுகன்யா தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூர் பகுதியில் தனது தாய் வீட்டில் மகளுடன் இருந்துள்ளார். அவருடைய மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10 ம் வகுப்பில் சேர்ந்து பயின்று வந்தார். அந்த சமயத்தில் சம்பவ நாளில் சுகன்யாவை மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்ட முத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை வெடித்தது. இதில் மன வேதனையடைந்த சுகன்யா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் உடனடியாக காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுகன்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.