நாமக்கல்லில் தங்க நகைக்காக மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டி கொலை தொடர்பில் எதிர்வீட்டில் வசிக்கும் எலக்ட்ரீசியன் சங்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குறித்த மூதாட்டி வீட்டில் மின்விசிறியில் (Fan) ஏற்பட்ட பழுதை சரி செய்ய எலக்ட்ரீசியன் சங்கர் சென்றுள்ளார். அப்போது கதவை மூடிக்கொண்டு மூதாட்டியிடம் நகையை பறிக்க முயன்றுள்ளார்.
பின்னர், மூதாட்டியை அவர் கொலை செய்துவிட்டு தப்பியோட முயற்சித்துள்ளார். அப்போது அங்கிருந்த மக்கள் கொலையாளியான சங்கரை பிடித்து போலீசாரிடம் மக்கள் ஒப்படைத்தனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பில் போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.